4-ஆவது டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த மே.இ.தீ. அணி 178/8 ரன்கள் எடுத்து. அடுத்து ஆடிய இந்தியா 17 ஓவர்களில் 179/1 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 84 ரன்களும் திலக் வர்மா 7 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். கில் 47 பந்துகளில் 77 அடித்து எடுத்து அவுட்டானார். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2-2 என இந்திய அணி சமன் செய்துள்ளது.
இதையும் படிக்க: ஆசிய ஹாக்கி: இந்தியா 4-ஆவது முறையாக சாம்பியன்
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்-ராகுல் ஜோடி 165 ரன்கள் எடுத்ததுதான் அதிகபட்ச ரன்களாகும். இந்த சாதனையை சமன்செய்துள்ளார்கள் இளம் ஜோடிகளான ஜெய்ஸ்வால்- கில்.
டி20களில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய அணி தொடக்க வீரர்கள் பட்டியல்: