எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றி ஆசியக் கோப்பையில் உதவும்: பாபர் அசாம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடுவதற்கு உந்துதலாக இருக்குமென அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2023, 11:38 am

DIN

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடுவதற்கு உந்துதலாக இருக்குமென அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடுவதற்கு உந்துதலாக இருக்குமென அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் ஆசியக் கோப்பையில் விளையாடுவதை எதிர்நோக்கி ஆவலாக உள்ளோம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு உதவியாக இருக்கும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வெற்றி எளிதானதாக இருக்கவில்லை. சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற ஆடுகளத்தில் அவர்களை எதிர்கொள்வது மிகக் கடினம். இந்த ஒருநாள் தொடரில் கிடைத்த வெற்றி ஆசியக் கோப்பையில் சிறப்பாக வெற்றிப் பயணத்தை தொடர உதவியாக இருக்கும். எங்களது ரசிகர்களுக்காக சிறப்பான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.