இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று (டிசம்பர் 12) நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்கிறது.
உடல்நலக் குறைவு காரணமாக இன்றையப் போட்டியில் இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடவில்லை.