அணியை கேப்டனாக வழிநடத்துவதில் எனக்குள் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா என இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் இரண்டு புதிய அணிகள் களமிறங்கின. அதில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஒன்று. அறிமுகமான முதல் சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வென்று அசத்தியது. அந்த அணியினை கேப்டனாக ஹார்திக் பாண்டியா சிறப்பாக வழிநடத்தினார். இந்த நிலையில், அணியை கேப்டனாக வழிநடத்துவதில் எனக்குள் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா என அவர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரைக் கைப்பற்றிய பிறகு ஹார்திக் பாண்டியா இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து ஹார்திக் பாண்டியா கூறியதாவது: குஜராத் டைட்டன்ஸ் அணியில் முக்கியமாக எனக்கு தோன்றுவது பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ராவுடன் இணைந்து செயல்பட்டது தான். எனது வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை அவர் ஏற்படுத்தினார். அதற்கு காரணம் எங்கள் இருவரின் மனநிலை தான். நாங்கள் இருவரும் வேறு வேறு மனிதர்களாக இருக்கலாம். ஆனால், கிரிக்கெட் குறித்த எங்களது சிந்தனை ஒரே மாதிரியாக இருந்தது. நான் அவருடன் இருந்ததால் அது எனது அணியைக் கேப்டனாக வழிநடத்தப் பெரிதும் உதவியது. அவரிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள் எனக்கு என்ன தெரியுமோ அதனை சரியாக செய்ய உதவியது. எனக்கு என்னைப் பற்றி ஏற்கனவே தெரிந்த விஷயங்களை மேலும் பலப்படுத்திக் கொண்டேன். அது கண்டிப்பாக எனக்கு உதவியது என்றார்.
இதையும் படிக்க: 'இருள் ஆளப்போகிறது': டிமாண்டி காலனி 2 படத்தின் அறிமுக விடியோ!
ரோஹித் சர்மா அணியில் இல்லாத சூழலில் இந்திய அணியை ஹார்திக் பாண்டியா வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்

சுருளி அருவியில் நீர் வரத்து சீரானது: சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3)

நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



