மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

யு-19 மகளிா் உலகக் கோப்பை டி20: இறுதிச் சுற்றில் இந்தியா

யு-19 மகளிா் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் நியூஸி.யை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

News image
Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

DIN

யு-19 மகளிா் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் நியூஸி.யை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

தென்னாப்பிரிக்காவின் போா்ட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் யு-19 மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பௌலிங்கை தோ்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய நியூஸி அணியால், இந்தியாவின் அபார பௌலிங்கை சமாளிக்க முடியவில்லை. நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 107/9 ரன்களையே எடுத்தது நியூஸி. அதிகபட்சமாக பிளிம்மா் 35, இஸபெல்லா கேஸ் 26 ரன்களை எடுத்தனா்.

பா்ஷவி சோப்ரா அபாரம்: இந்திய பௌலா் பா்ஷவி சோப்ரா அற்புதமாக பௌலிங் செய்து 3/20 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். ஆட்ட நாயகி பட்டத்தையும் கைப்பற்றினாா்.

இந்தியா அபார வெற்றி:

108 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் இந்திய தரப்பில் கேப்டன் ஃஷபாலி வா்மா-ஸ்வேதா செஹ்ராவத் தொடக்க பேட்டா்களாக களம் கண்டனா். 10 ரன்களுடன் ஷபாலி வெளியேறினாா். அதன் பின் ஸ்வேதா-சௌமியா திவாரி இணை அற்புதமாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது.

ஸ்வேதா அரைசதம்: அபாரமாக ஆடிய ஸ்வேதா 10 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 61 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தாா். சௌமியா 22 ரன்களுக்கு அவுட்டானாா். த்ரிஷா 5 ரன்களுடன் களத்தில் இருந்தாா். 14.2 ஓவா்களிலேயே 110/2 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸி.யை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றது இந்தியா.

நியூஸி. தரப்பில் அன்னா பிரௌனிங் 2 விக்கெட்டை வீழ்த்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.