ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியால் ரன் அவுட் செய்யப்பட்ட விதம் சர்ச்சையைக் கிளப்பியது. விதிகளுக்கு உட்பட்டே ரன் அவுட் செய்யப்பட்டதால் மூன்றாம் நடுவர் அவுட் என தீர்ப்பளித்தார். இருப்பினும், ஆஸ்திரேலிய அணி விளையாட்டின் மாண்பை பாதிக்கும் வகையில் இங்கிலாந்து வீரரை ரன் அவுட் செய்தாக பலரும் விமர்சித்தனர். இங்கிலாந்து ரசிகர்களும் ஆஸ்திரேலிய அணி ஏமாற்றுவதாக அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த விவகாரம் இங்கிலாந்து பிரதமர் விமர்சிக்கும் அளவுக்கு பெரிதானது.