தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஆர்சிபி... ஏலம்... போன் அழைப்பு: மேக்ஸ்வெல் பகிர்ந்த அனுபவம்!

ஐபிஎல் 2022 ஏலத்துக்கு முன்பு ஆர்சிபி அணியில் தன்னைத் தக்கவைத்தது தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்...

News image
Updated On :8 மார்ச் 2023, 7:30 am

ஐபிஎல் 2022 ஏலத்துக்கு முன்பு ஆர்சிபி அணியில் தன்னைத் தக்கவைத்தது தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் பிரபல ஆஸி. பேட்டர் கிளென் மேக்ஸ்வெல்.

ஐபிஎல் 2022 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது. அதற்கு முன்பு மெகா ஏலம் நடைபெற்றது. சில வீரர்களை அணிகள் தக்கவைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, விராட் கோலி (ரூ. 15 கோடி), மேக்ஸ்வெல் (ரூ. 11 கோடி), சிராக் (ரூ. 7 கோடி) ஆகிய மூவரையும் தக்கவைத்துக் கொண்டது ஆர்சிபி அணி. 

இந்நிலையில் ஆர்சிபி அணி ஏலத்துக்கு முன்பு தன்னைத் தக்கவைத்துக் கொண்டது பற்றி மேக்ஸ்வெல் கூறியதாவது:

பெரிய ஏலம் என்பதால் என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது. எத்தனை பேரைத் தக்கவைக்கப் போகிறார்கள் என்பதும். சிராஜ், ஹர்ஷல், சஹால், ஏபி டி வில்லியர்ஸ், கோலி, இந்திய இளம் வீரர்கள் எனப் பலரைத் தக்கவைக்க வாய்ப்பிருந்தது. எனவே ஒரு வெளிநாட்டு பேட்டரைத் தக்கவைப்பது சரியான முடிவாக இருக்காது. இதுதான் நிலைமை. ஆனால் என் மண்டைக்குள் பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அப்போது (ஆர்சிபி இயக்குநர் மைக் ஹெசனிடமிருந்து) நான் தக்கவைக்கப்பட்டுள்ளதாக எனக்குத் தொலைப்பேசி அழைப்பு வந்தது. உடனே நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் என்று கூறியுள்ளார். 

ஐபிஎல் 2021 போட்டியில் 15 ஆட்டங்களில் 513 ரன்கள் எடுத்தார் மேக்ஸ்வெல். ஐபிஎல் 2022 போட்டியில் 13 ஆட்டங்களில் 301 ரன்கள் எடுத்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.