வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நான் சாஹித் அஃப்ரிடி அல்ல: சுரேஷ் ரெய்னா பதில்!

சுரேஷ் ரெய்னா, 41 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.

News image
Updated On :16 மார்ச் 2023, 11:06 am

DIN

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் மாஸ்டர்ஸ் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. தோஹாவில் மார்ச் 10 அன்று தொடங்கிய இந்தப் போட்டி, மார்ச் 20 அன்று நிறைவுபெறுகிறது. ஆசியன் லயன்ஸ், இந்தியா மஹாராஜாஸ், வேர்ல்டு ஜெயண்ட்ஸ் என மூன்று அணிகள் பங்கேற்றுள்ளன.

தோஹாவில் நேற்று நடைபெற்ற இந்தியா மஹாராஜாஸ் - வேர்ல்டு ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வேர்ல்டு ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா, 41 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.

செய்தியாளர் சந்திப்பில் சுரேஷ் ரெய்னாவிடம், லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று நீங்கள் விளையாடியதைப் பார்த்த பலருக்கும் நீங்கள் ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாட வேண்டும் எனத் தோன்றுகிறது எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சுரேஷ் ரெய்னா, நான் சுரேஷ் ரெய்னா, சாஹித் அஃப்ரிடி அல்ல. நான் ஓய்வு பெற்றுவிட்டேன் என்று சொல்லி சிரித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.