ஐபிஎல் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. இந்த ஆட்டம் ஐபிஎல் போட்டியின் வரலாற்றில் 1000-ஆவது ஆட்டமாகும்.
இதில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் சோ்க்க, மும்பை 19.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்து வென்றது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்களை எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார். இது குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் கூறியதாவது:
கடந்த வருஷம் ஜெய்ஸ்வால் விளையாடியதை பார்த்துள்ளேன். இந்த வருஷம் ஆட்டத்தை வேற லெவலில் எடுத்து சென்றுள்ளார். நான் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் எங்கிருந்து இந்தளவுக்கு சக்தி (பவர்) வந்தது எனக் கேட்டேன். அதற்கு அவர், ‘அதிகமாக ஜிம்மில் நேரம் செலவிடுகிறேன்’ எனக் கூறினார். பந்தினை நன்றாக அடிக்கிறார். இது அவருக்கும் நல்லது. ராஜஸ்தான் அணி மற்றும் இந்திய அணிக்கும் நல்லது.