ஐபிஎல் குவாலிஃபையர் 2 போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று குவாலிஃபையர் 2 போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியானது குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, குஜராத் முதலில் பேட் செய்கிறது.
சாய் சுதர்ஷன் மற்றும் ஜோஸ் லிட்டில் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.
இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் (மே 28) இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.