இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வெளிநாட்டு வீரர்!

இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.
இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வெளிநாட்டு வீரர்!

இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.

உலகக் கோப்பையில் லக்னௌவில் நேற்று (அக்டோபர் 16) இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது இந்த சாதனையை அவர் படைத்தார். இரு அணிகளுக்கும் இடையிலான நேற்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த உலகக் கோப்பையில் தனது  வெற்றிக் கணக்கைத் தொடங்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் 21 பந்துகளில் 31 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2  சிக்ஸர்கள் அடங்கும். 

இந்தப் போட்டியில் 2  சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், இந்திய மண்ணில் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மேக்ஸ்வெல். இந்திய மண்ணில் இதுவரை அவர் 51 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்தப் பட்டியலில் அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் பொல்லார்டு (49 சிக்ஸர்கள்), அஸ்கர் ஆஃப்கன் (48 சிக்ஸர்கள்), ஏபி டி வில்லியர்ஸ் (48  சிக்ஸர்கள்) உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com