எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இலங்கை வீரர் நியமனம்!

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஷேன் பாண்ட் விலகியதை தொடர்ந்து தற்போது இலங்கை வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image

மும்பை இந்தியன்ஸ் அணியினர்

Updated On :20 அக்டோபர் 2023, 6:04 pm IST

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பை வென்றுள்ளது. இந்த அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இன்று (அக்டோபர் 20) நியமிக்கப்பட்டுள்ளார்.

லசித் மலிங்கா ஐபிஎல் தொடரில் 2008-2017 மற்றும் 2019-2020 ஆகிய ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி உள்ளார். 

சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஷேன் பாண்ட் விலகியதைத் தொடர்ந்து மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த அறிவிப்பை மும்பை இந்தியன்ஸ் அணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. 43 வயதாகும் லசித் மலிங்கா இதுவரை 83 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 107 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

மொத்தமாக, 289 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 390 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.