துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய மகளிர் அணியினர் புதன்கிழமை தங்கப் பதக்கத்தை வென்றனர்.
துப்பாக்கி சுடுதலில் இந்திய மகளிர் அணிக்கு தங்கம்
துப்பாக்கி சுடுதலில் இந்திய மகளிர் அணிக்கு தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய மகளிர் அணியினர் புதன்கிழமை தங்கப் பதக்கத்தை வென்றனர்.

மகளிருக்கான 25 மீ. துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற மனு பேக்கர், ஈஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் அடங்கிய மூவர் அணி 1,759 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

அதேபோல், 50 மீ. துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற சாம்ரா கவுர், ஆஷி சௌக்சி மற்றும் மனினி கௌஷிக் அணியினர் 1,764 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றனர். 19 புள்ளிகள் வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டனர்.

இதன்மூலம் 4 தங்கப் பதக்கங்களுடன் புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்தில் இந்தியா உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com