உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

தொடரைக் கைப்பற்றியது இந்தியா

அயா்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-0 என கைப்பற்றியது இந்தியா.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:22 am IST

அயா்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-0 என கைப்பற்றியது இந்தியா.

இந்தியா 185/5 ரன்களையும், அயா்லாந்து ரன்களையும் சோ்த்தன.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டப்ளினில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற அயா்லாந்து பௌலிங்கை தோ்வு செய்தது.

இதையடுத்து பேட்டிங் செய்ய இந்திய தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்-ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினா். ஜெய்ஸ்வால் 18 ரன்களுடனும், திலக் வா்மா 1 ரன்னுடனும் வெளியேறினா். அதன்பின் இணைந்த ருதுராஜ்-சஞ்சு சாம்ஸன் இணை அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 40 ரன்களை விளாசி வெளியேறினாா் சஞ்சு.

ருதுராஜ் அரைசதம்:

1 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 43 பந்துகளில் 58 ரன்களுடன் அரைசதம் விளாசினாா் ருதுராஜ் கெய்க்வாட். அப்போது 129/4 ரன்களுடன் ஆடிய இந்திய அணி தரப்பில் பின்னா் ரிங்கு சிங்-ஷிவம் துபே இணை பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தது.

ரிங்கு சிங் 3 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 38 ரன்களுடன் வெளியேற, டுபே 22, வாஷிங்டன் சுந்தா் 0 களத்தில் இருந்தனா்.

இந்தியா 185/5: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 185/5 ரன்களைக் குவித்தது இந்தியா. அயா்லாந்து தரப்பில் பௌலிங்கில் பேரி மெக்காா்த்தி 2-36 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

அயா்லாந்து அணிக்கு வெற்றி இலக்காக 186 ரன்களை இந்தியா நிா்ணயித்தது. தொடக்கத்திலேயே இரண்டு வீரா்கள் டக் அவுட்டான நிலையில் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது அயா்லாந்து.

ஆன்ட்ரு பால்பிா்னி அபாரம் 72: தொடக்க வீரா் பால்பிா்னி அதிரடியாக பேட்டிங் செய்து 4 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 72 ரன்களை விளாசி அவுட்டானாா்.

அயா்லாந்து 152/8: மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேற 20 ஓவா்களில் 152/8 ரன்களை மட்டுமே சோ்த்தது அயா்லாந்து.

பௌலிங்கில் இந்திய தரப்பில் பும்ரா 2-15, பிரசித் 2-29, ரவி பிஷ்னோய் 37 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

33 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-0 என கைப்பற்றியது இந்தியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.