இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

ஐபிஎல்: சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் அறிவிப்பு

ஐபிஎல் 2023 போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்க பேட்டர் மார்க்ரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :23 பிப்ரவரி 2023, 11:43 am IST

ஐபிஎல் 2023 போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்க பேட்டர் மார்க்ரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரு வருடங்களாக சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் மிக மோசமாக விளையாடியது. 2021-ல் 3 வெற்றிகள் மட்டுமே பெற்ற சன்ரைசர்ஸ் அணி, 2022-ல் 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தையே பிடித்தது. கடந்த இரு வருடங்களில் 28 ஆட்டங்களில் 9 வெற்றிகள், 18 தோல்விகள், ஒரு டை என ஐபிஎல் போட்டியின் பலவீனமான அணியாகவே சன்ரைசர்ஸ் இருந்தது. இதையடுத்து சன்ரைசர்ஸ் - பயிற்சியாளர் டாம் மூடி என இரு தரப்பும் பிரிந்து செல்ல முடிவெடுத்தன. பிறகு, பிரபல முன்னாள் வீரர் பிரையன் லாரா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கடந்த வருடம் சன்ரைசர்ஸ் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் இந்த வருடம் குஜராத் அணியில் விளையாடவுள்ளார். 

இந்நிலையில் ஐபிஎல் 2023 போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்க பேட்டர் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 28 வயது மார்க்ரம், தென்னாப்பிரிக்க அணிக்காக 33 டெஸ்ட், 47 ஒருநாள், 31 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில் எஸ்ஏ 20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்குத் தலைமை தாங்கி, சாம்பியன் பட்டம் வென்றார். இதன் காரணமாக ஐபிஎல் போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.