வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ஜிம்பாப்வே டி20 அணியில் இங்கிலாந்து வீரர்!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள ஜிம்பாப்வே அணியில் இங்கிலாந்து முன்னாள் வீரரான கேரி பேலன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :4 ஜனவரி 2023, 5:32 pm IST

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள ஜிம்பாப்வே அணியில் இங்கிலாந்து முன்னாள் வீரரான கேரி பேலன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே நாட்டில் பிறந்த கேரி பேலன்ஸ், 2013 முதல் 2017 வரை இங்கிலாந்து அணிக்காக 23 டெஸ்டுகள், 16 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடினார். சிறுவயது முதல் இங்கிலாந்தில் வாழ்ந்ததால் அங்கேயே கிரிக்கெட்டைப் பயின்று பிறகு இங்கிலாந்து அணியிலும் இடம்பிடித்தார். (எனினும் 2006 யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடினார். ) 

கவுன்டி கிரிக்கெட்டில் நிறவெறி தொடர்பான சர்ச்சையில் சிக்கியதால் தற்போது ஜிம்பாவே அணிக்காக விளையாட முடிவெடுத்துள்ளார் பேலன்ஸ். ஐசிசி விதிமுறைகளின்படி வெவ்வேறு நாடுகளின் அணிகளில் ஒரு வீரர் இடம்பெறுவதற்கு மூன்று வருட இடைவெளி இருக்க வேண்டும். அதன்படி தற்போது ஜிம்பாப்வே அணியில் இடம்பிடித்துள்ளார். ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துடனான இரு வருட ஒப்பந்தத்தில் 33 வயது பேலன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஐஎல்டி20 போட்டியில் விளையாடுவதால் ஜிம்பாப்வே அணியில் சிகந்தர் ராஸா இடம்பெறவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.