காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

‘தீ’யாக சதமடித்த சூர்யகுமார்: ஹைலைட்ஸ் விடியோ! 

இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அதிரடியாக சதமடித்தார் சூர்யகுமார் யாதவ். அதன் ஹைலைட்ஸ் விடியோ. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:10 am IST

இந்தியா-இலங்கை இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ராஜ்கோட்டில் சனிக்கிழமை (ஜன.7) இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது. 

முதலில் ஆடிய இந்தியா 228/5 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய இலங்கை 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பேட்டா் சூர்யகுமாா் யாதவின் அதிரடி சததத்தால், இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரையும் 2-1 என கைப்பற்றியது இந்தியா. 

சூர்யகுமாா் யாதவ் 51 பந்துகளில் 9 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 112 ரன்களை விளாசி இறுதி வரை களத்தில் இருந்தாா். வெறும் 26 பந்துகளில் சூர்யகுமாா் 50 ரன்களைக் கடந்தாா். இது சூர்யகுமாரின் 3-ஆவது டி20 சதமாகும். தொடக்க வீரராக களமிறங்காமல் இத்தனை சதமடித்த முதல் வீரரும் இவரே. நேற்று (ஜனவரி 7) சூர்யகுமார் அடித்த ஒவ்வொரு ஷாட்டுகளையும் கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள். சூர்யாவின் அதிரடியான சதத்தினை கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.