இந்தியா - இலங்கை ஒருநாள்: விடுமுறை அறிவிப்பு!

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் ஆட்டம் நடைபெறுவதால்...
இந்தியா - இலங்கை ஒருநாள்: விடுமுறை அறிவிப்பு!
Updated on
1 min read

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் ஆட்டம் நடைபெறுவதால் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது அஸ்ஸாம் அரசு.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என வென்றது இந்திய அணி. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் குவாஹட்டியில் நாளை தொடங்கவுள்ளது. இதையடுத்து குவாஹட்டி நகர் அமைந்துள்ள கம்ருப் மாவட்டத்துக்கு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது அஸ்ஸாம் அரசு. அரசு அலுவலங்களும் கல்வி நிறுவனங்களும் மதியம் 1 மணிக்குப் பிறகு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வருடம் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறுவதால் இத்தொடரில் ரோஹித் சர்மா, கோலி, கே.எல். ராகுல், பும்ரா, பாண்டியா. சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், ஷமி, சஹால் உள்ளிட்ட பிரபல வீரர்கள் பலரும் பங்கேற்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com