நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்வது எப்படி?: புதிய திட்டத்துடன் பிரபல ஆஸி. வீரர்

ஒரு செஸ் ஆட்டம் போல எங்களுடைய மோதல் இருக்கப்போகிறது. இதற்காக நான் காத்திருக்கிறேன் என்றார். 

News image
Updated On :13 ஜனவரி 2023, 12:58 pm IST

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், பிப்ரவரி 9 முதல் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் பற்றியும் அஸ்வினை எதிர்கொள்வது பற்றியும் பிரபல ஆஸி. பேட்டர் மார்னஸ் லபுஷேன் கூறியதாவது:

கடைசியாக விளையாடிய டெஸ்ட் தொடரிலிருந்து அஸ்வினுக்கு எதிராக எப்படி விளையாடுவது என யோசித்துக் கொண்டிருக்கிறேன். அஸ்வினைப் பற்றி கேள்விப்பட்டதை வைத்தும் அவர் எனக்குப் பந்துவீசியதை வைத்தும் என்னுடைய ஆட்டமுறைகளை மாற்றிக்கொண்டுள்ளேன். அஸ்வினின் சில உத்திகளை வீழ்த்தும் விதத்தில் என்னுடைய ஆட்டத்தைச் சரிப்படுத்தியுள்ளேன். ஒரு செஸ் ஆட்டம் போல எங்களுடைய மோதல் இருக்கப்போகிறது. இதற்காக நான் காத்திருக்கிறேன் என்றார். 

புகழ்பெற்ற 2020-21 டெஸ்ட் தொடரில் லபுஷேனின் விக்கெட்டுகளை ஆறு இன்னிங்ஸ்களில் இருமுறை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.