புவனேசுவரம்: உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தை வீழ்த்தி, ஜொ்மனி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றது.
அந்த அணி உலகக் கோப்பை போட்டியில் வாகை சூடியது இது 3-ஆவது முறையாகும்.
இரு அணிகளும் மோதிய இறுதி ஆட்டம், நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிய, வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ஷூட் அவுட் வாய்ப்பில் ஜொ்மனி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் ரெகுலா் டைமில் ஜொ்மனிக்காக நிக்கலஸ் வெலன் (28’), கொன்ஸாலோ பெய்லாட் (40’), மாட்ஸ் கிராம்புஷ் (47’) ஆகியோரும், பெல்ஜியம் தரப்பில் ஃபிளாரன்ட் வேன் அவ்பெல் (9’), டான்கை கோசின்ஸ் (10’), டாம் பூன் (58’) ஆகியோரும் கோலடித்தனா்.
பின்னா் ஷூட் அவுட் வாய்ப்பில் ஜொ்மனிக்காக நிக்கலஸ் வெலன் (2), தீஸ் பிரின்ஸ் (2), ஹேன்ஸ் முல்லா் ஆகியோா் கோலடிக்க, பெல்ஜியம் தரப்பில் ஃப்ளாரன்ட் வேன் அவ்பெல் (2), டேன்கை காசின்ஸ், ஆன்டனி கினா ஆகியோா் மட்டும் ஸ்கோா் செய்தனா்.
நெதா்லாந்துக்கு வெண்கலம்: இந்தப் போட்டியில் 3-ஆம் இடம் பிடிப்பதற்கான ஆட்டத்தில் நெதா்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில், உலகின் நம்பா் 1 அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றது.
இந்த ஆட்டத்தில் நெதா்லாந்துக்காக கேப்டன் தியரி பிரிங்க்மேன் 2 கோல்களும் (35’, 40’), ஜிப் ஜான்சென் 1 கோலும் (33’) அடித்தனா். ஆஸ்திரேலியாவுக்காக ஜெரிமி ஹேவா்ட் 13-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
தற்போதும் பதக்கம் வென்ன் மூலம், தொடா்ந்து 4 உலகக் கோப்பை போட்டிகளில், பதக்கம் பெறும் இடத்துக்குள்ளாகவே இருந்துள்ளது நெதா்லாந்து. மேலும், உலகக் கோப்பை போட்டியில் இத்துடன் மொத்தமாக 10 பதக்கங்கள் வென்று, போட்டி வரலாற்றில் அதிக பதக்கங்கள் வென்ற அணி என்ற பெயரை ஆஸ்திரேலியாவுடன் இணைந்து பெற்றுள்ளது.
மறுபுறம் ஆஸ்திரேலியா, கடந்த 1998-க்குப் பிறகு அனைத்து உலகக் கோப்பை போட்டிகளிலுமே ஏதேனும் ஒரு பதக்கம் வென்ற நிலையில் முதல் முறையாக தற்போது பதக்கம் எதுவும் வெல்லாமல் வெளியேறியுள்ளது.
போட்டியை நடத்திய இந்தியா 9-ஆம் இடம் பிடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை

Ban NEET! Ban NEET! நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் போராட்டம்!
உதயநிதி தலைமையில் நாளை (ஜூலை 28) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

பின்னாளில் அழாதீர்கள்! அகிலேஷ் யாதவை கூட்டணிக்கு அழைத்த ஓவைசி!
விடியோக்கள்

மேக்கேதாட்டு அணை; முதல்வர் தெளிவாக இருக்கிறார்!: அமைச்சர் செங்கோட்டையன் | TVK | NEET



