எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

முத்தரப்பு டி20: மே.இ. தீவுகளை வீழ்த்திய இந்திய மகளிர் அணி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 ஆட்டத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய மகளிர் அணி.

News image
Updated On :31 ஜனவரி 2023, 11:32 am IST

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 ஆட்டத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய மகளிர் அணி.

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ஹேலி மேத்யூஸ் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். தீப்தி சர்மா அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்திய மகளிர் அணி, 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெமிமா 42, கேப்டன் ஹர்மன்ப்ரீதி கெளர் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

இந்திய அணி இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் ஒரு தோல்வியும் இன்றி 7 புள்ளிகளைப் பெற்றது. மே.இ. தீவுகள் அணி விளையாடிய 4 ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியிடம் ஒருமுறை தோற்றது. 

வியாழன் அன்று நடைபெறும் முத்தரப்புப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.