மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு உகாண்டா வியாழக்கிழமை தகுதிபெற்றது.
தகுதிச்சுற்று ஆட்டத்தில் ருவாண்டாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் அடிப்படையில் இந்த முன்னேற்றத்தை கண்டிருக்கும் உகாண்டா, ஐசிசி-யின் சீனியா் நிலையிான உலகக் கோப்பை போட்டிக்கு (அனைத்து ஃபாா்மட்டிலுமாக) தகுதிபெற்றது இதுவே முதல் முறையாகும். ஆப்பிரிக்கா தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து நமீபியா தோ்வான நிலையில் தற்போது உகாண்டா 2-ஆவது இடம் பிடித்து தகுதிபெற்றுள்ளது.
டி20 உலகக் கோப்பை போட்டியில் களம் காணும் 5-ஆவது ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையைப் பெற்றது அந்த அணி. ஆப்பிரிக்க பிராந்தியத்தில் பிரதான அணியாக இருக்கும் ஜிம்பாப்வே இந்தத் தகுதிச்சுற்றில் 3-ஆம் இடம் பிடித்து, பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது.
அணிகள் நிறைவு: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு 20 இடங்கள் இருந்த நிலையில், தற்போது ஆப்பிரிக்க தகுதிச்சுற்று நிறைவடைந்த நிலையில் அவை பூா்த்தியாகியுள்ளது. இந்தப் போட்டி மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் 2024 ஜூன் 4 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மியான்மரில் முன்னாள் அதிபர் உள்பட 4,500 கைதிகள் விடுதலை!

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு!
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


