ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் அக்.5ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடபெற்று வருகின்றன. ஆஸி. அணி தனது பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்துடன் மோதியது. அந்தப் போட்டி மழையினால் கைவிடப்பட்டது.
தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிற ஆஸி. அணி 20 ஓவர் முடிவில் 127/2 ரன்கள் எடுத்துள்ளது.
இதையும் படிக்க: சூர்யகுமார் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்!
வார்னர்-48 ரன்கள், மிட்செல் மார்ஷ்-31 ரன்களுக்கு ஆட்டமிழக்க தற்போது ஸ்மித் 19 ரன்களுடனும், லபுஷேன் 23 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள். பாகிஸ்தானின் உஸாமா மிர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
பாகிஸ்தான் அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டிதான் பயிற்சி ஆட்டங்களில் கடைசி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா நெதர்லாந்து அணிகளின் போட்டி மழையினால் தாமதமாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்

அடடா! 1 மணி நேர மின் தடையை நாசூக்காக சொன்ன தொல். திருமாவளவன்!

அரசுப் பள்ளிகளில் நாள்தோறும் காயத்ரி மந்திரம் கட்டாயம்: சத்தீஸ்கர் அரசு உத்தரவு







