திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

உலகக் கோப்பை தொடரிலிருந்து இலங்கை கேப்டன் விலகல்!

ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலிருந்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா காயம் காரணமாக விலகியுள்ளார். 

News image
Updated On :15 அக்டோபர் 2023, 3:21 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி கடந்த செவ்வாய் கிழமை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்தப் போட்டியின்போது இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவுக்கு வலது தொடையில் காயம் ஏற்பட்டது. 

கடந்த அக்.5ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் இலங்கை விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் 32 வயதான இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  

ஏற்கனவே ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுடம் இலங்கை மோசமாக தோல்வியுற்றது. ஷனகாவின் கேப்டன்சி கேள்விக்குறியானது. இந்நிலையில் அவருக்குப் பதிலாக சமீகா கருணா ரத்னா  அணியில் இடம்பெற்றுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. 

இலங்கை அணியின் கேப்டனாக குசால் மெண்டிஸ் செயல்படுவாரென இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.