மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

உலகக் கோப்பை தொடரிலிருந்து இலங்கை கேப்டன் விலகல்!

ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலிருந்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா காயம் காரணமாக விலகியுள்ளார். 

Published On :

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி கடந்த செவ்வாய் கிழமை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்தப் போட்டியின்போது இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவுக்கு வலது தொடையில் காயம் ஏற்பட்டது. 

கடந்த அக்.5ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் இலங்கை விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் 32 வயதான இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  

ஏற்கனவே ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுடம் இலங்கை மோசமாக தோல்வியுற்றது. ஷனகாவின் கேப்டன்சி கேள்விக்குறியானது. இந்நிலையில் அவருக்குப் பதிலாக சமீகா கருணா ரத்னா  அணியில் இடம்பெற்றுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. 

இலங்கை அணியின் கேப்டனாக குசால் மெண்டிஸ் செயல்படுவாரென இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.