நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வெளிநாட்டு வீரர்!

இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.

News image
Updated On :17 அக்டோபர் 2023, 10:05 am

DIN

இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.

உலகக் கோப்பையில் லக்னௌவில் நேற்று (அக்டோபர் 16) இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது இந்த சாதனையை அவர் படைத்தார். இரு அணிகளுக்கும் இடையிலான நேற்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த உலகக் கோப்பையில் தனது  வெற்றிக் கணக்கைத் தொடங்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் 21 பந்துகளில் 31 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2  சிக்ஸர்கள் அடங்கும். 

இந்தப் போட்டியில் 2  சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், இந்திய மண்ணில் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மேக்ஸ்வெல். இந்திய மண்ணில் இதுவரை அவர் 51 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்தப் பட்டியலில் அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் பொல்லார்டு (49 சிக்ஸர்கள்), அஸ்கர் ஆஃப்கன் (48 சிக்ஸர்கள்), ஏபி டி வில்லியர்ஸ் (48  சிக்ஸர்கள்) உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.