தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

ஸ்டார்க் சாதனையை சமன்செய்த முகமது ஷமி! 

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் சாதனையை இந்திய வீரர் முகமது ஷமி சமன்செய்துள்ளார். 

Published On :6 பிப்ரவரி 2024, 6:48 pm IST

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் சாதனையை இந்திய வீரர் முகமது ஷமி சமன்செய்துள்ளார். 

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 29-ஆவது ஆட்டத்தில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. இந்திய பௌலிங்கில் முகமது ஷமி 4, ஜஸ்பிரீத் பும்ரா 3, குல்தீப் யாதவ் 2, ரவீந்திர ஜடேஜா 1 என விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 6 முறை 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார் முகமது ஷமி. இதற்குமுன்பாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக விளையாட வாய்ப்பில்லாமல் இருந்தாலும் விளையாடும் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசுகிறார் ஷமி. 13 இன்னிங்ஸில் 6 முறை 4 விக்கெட்டுகளை அடுத்து அசத்திய ஷமிக்கு இந்த உலகக் கோப்பையில் இதுவரை 9 விக்கெட்டுகள் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Story image

இந்தச் சாதனையை முன்னிட்டு ஐசிசி நிர்வாகம் ஷமிக்கு புதிய போஸ்டரினை வெளியிட்டுள்ளது. இதில் ஸ்டார்க், ஷமி இருக்கும் புகைப்படத்துடன் உலகக் கோப்பையில் அதிகம் முறை 4 விக்கெட்டுகளை எடுத்தவர்கள் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.