புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஸ்டார்க் சாதனையை சமன்செய்த முகமது ஷமி! 

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் சாதனையை இந்திய வீரர் முகமது ஷமி சமன்செய்துள்ளார். 

News image
Updated On :30 அக்டோபர் 2023, 3:56 pm IST

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் சாதனையை இந்திய வீரர் முகமது ஷமி சமன்செய்துள்ளார். 

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 29-ஆவது ஆட்டத்தில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. இந்திய பௌலிங்கில் முகமது ஷமி 4, ஜஸ்பிரீத் பும்ரா 3, குல்தீப் யாதவ் 2, ரவீந்திர ஜடேஜா 1 என விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 6 முறை 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார் முகமது ஷமி. இதற்குமுன்பாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக விளையாட வாய்ப்பில்லாமல் இருந்தாலும் விளையாடும் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசுகிறார் ஷமி. 13 இன்னிங்ஸில் 6 முறை 4 விக்கெட்டுகளை அடுத்து அசத்திய ஷமிக்கு இந்த உலகக் கோப்பையில் இதுவரை 9 விக்கெட்டுகள் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Story image

இந்தச் சாதனையை முன்னிட்டு ஐசிசி நிர்வாகம் ஷமிக்கு புதிய போஸ்டரினை வெளியிட்டுள்ளது. இதில் ஸ்டார்க், ஷமி இருக்கும் புகைப்படத்துடன் உலகக் கோப்பையில் அதிகம் முறை 4 விக்கெட்டுகளை எடுத்தவர்கள் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.