வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

நடு இரவில் பேட்டிங் பயிற்சி செய்த அஸ்வின்! (விடியோ)

இந்திய கிரிக்கெட் வீரர் ரவி அஸ்வின் போட்டி முடிந்தப் பிறகு பேட்டிங் செய்யும் விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

News image

படம்: ட்விட்டர் (எக்ஸ்)

Updated On :23 செப்டம்பர் 2023, 10:29 am IST

ஐபிஎல் 2009இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதன்முதலாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இந்திய அணியில் ஒருநாள், டி20 போட்டிகளில் 2010இல் தேர்வானார். டெஸ்டில் 2011இல் களமிறங்கினார். 

சிஎஸ்கே அணியில் 6 ஆண்டுகள் இருந்த அஸ்வின் பல மறக்க முடியாத இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இந்திய அணியில் சிறந்த சுழல்பந்து வீச்சாளராக திகழ்கிறார். சிறந்த ஐசிசி பௌலர், ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிரண்டு இடங்களை பிடித்து அசத்தியுள்ளார். 

ஆஸி. எதிரான ஒருநாள் தொடரில் அஸ்வின் தேர்வாகி சிறப்பாக விளையாடினார். 10 ஓவர்கள் வீசி 47 ரன்களுக்கு ஒரு முக்கியமான(லபுஷேன்) விக்கெட்டினை வீழ்த்தினார். பும்ராவிற்குப் பிறகு குறைந்த ரன்களை வழங்கினார். 

281 ரன்கள் எடுத்து இந்திய அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. அஸ்வினுக்கு பேட்டிங் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

பௌலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆட வேண்டுமென போட்டி முடிந்தப் பிறகும் அஸ்வின் பயிற்சி எடுத்து வருகிறார். ஆல்ரவுண்டாக உலகக் கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்புள்ளது. அக்‌ஷர் படேல் பேட்டிங் அசத்தினாலும் பௌலிங்கில் சோபிக்கவில்லை. அஸ்வின் பேட்டிங்கில் மெருகேறினால் நிச்சயமாக அவர்தான் தேர்வு செய்யப்படுவார். 

இதனால்தான் அஸ்வின் தீவிரமாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.