கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: நியூசி. அணிக்கு புதிய கேப்டன்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு நியூசிலாந்து அணியின் புதிய கேப்டன் நியமனம்.

News image

நியூசிலாந்து அணி. - படம்: ஐசிசி

Updated On :3 ஏப்ரல் 2024, 4:42 pm IST

நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரினை விளையாடுவதற்காக பாகிஸ்தான் செல்லவிருக்கிறது. ஏப்.18இல் தொடங்கும் இந்தப் போட்டிகள் ஏப்.27இல் முடிவடைகிறது. இந்தத் தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக 33 வயதான ஆல் ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளர்.

கேன் வில்லியம்சன், மிட்செல் சான்ட்னர் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளதால் இந்த வாய்ப்பு பிரேஸ்வெல்லுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

33 வயதான இவர் கடைசியாக கடந்தாண்டு பிப்ரவரியில் டி20 விளையாடியது குறிப்பிடத்தக்கது. 16 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகள் 113 ரன்கள் எடுத்துள்ளார். 5 ஐபிஎல் போட்டிகளில் 6 விக்கெட்டுகள் 58 ரன்கள் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணி:

மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஃபின் ஆலன், மார்க் சாப்மன், ஜோஷ் கிளார்க்சன், ஜேகோப் டுஃபி, டீன் போக்ஸ்குரோப்ட், பென் லிஸ்டர், கோலி மெக்கோனிச், ஆடம் மில்னி, ஜிம்மி நீஷம், வில் ரூர்கே, டிம் ராபின்சன், பென் சியர்ஸ், டிம் செஃபர்ட், இஷ் சௌதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.