கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

எனக்கு பிடித்த பந்துவீச்சாளர் இவர்தான்; மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

தனக்கு பிடித்தமான பந்துவீச்சாளர் யார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.தோனி

Published On :

தனக்கு பிடித்தமான பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றுவதற்கு ஜஸ்பிரித் பும்ரா மிக முக்கிய பங்காற்றினார். 8 போட்டிகளில் விளையாடிய அவர் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரது சிறப்பான செயல்பாடுகள் அவருக்கு டி20 உலகக் கோப்பைத் தொடரின் தொடர் நாயகன் விருதினை பெற்றுத் தந்தது.

இந்த நிலையில், தனக்கு பிடித்தமான பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.

விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எம்.எஸ்.தோனி இது குறித்து பேசியதாவது: எனக்கு பிடித்தமான பந்துவீச்சாளரை தேர்ந்தெடுப்பது மிகவும் எளிது. ஏனென்றால், அந்த இடத்தில் பும்ரா இருக்கிறார். ஆனால், பிடித்த பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். ஏனெனில், நம்மிடம் நிறைய சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். சிறந்த பேட்ஸ்மேன்கள் நிறைய இருக்கிறார்கள் எனக் கூறுவதால், சிறந்த பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது பொருள் கிடையாது.

ஜஸ்பிரித் பும்ரா

ஜஸ்பிரித் பும்ரா - படம் | AP

அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவது குறித்து சிந்திக்க அதிக நேரம் இருக்கிறது. வீரர்களை தக்க வைப்பதில் என்ன மாதிரியான விதியினை கொண்டுவரப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அதனால், தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடும் முடிவு நமது கைகளில் இல்லை. புதிய விதிகள் வந்தபிறகு, அணியின் நலன் கருதி எனது முடிவை அறிவிப்பேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.