ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

சிஎஸ்கே உடை அணிந்து சேப்பாக்கம் வருகிறோம்: ஆட்ட நாயகன் அஸ்வின் பேச்சு!

டிஎன்பிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்றில் வெற்றிபெற்று குவாலிஃபையர் 2க்கு முன்னேறியுள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.

News image

அஸ்வின் - படங்கள்: இன்ஸ்டா / திண்டுக்கல் டிராகன்ஸ்

Updated On :1 ஆகஸ்ட் 2024, 12:18 pm IST

முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 20 ஓவர் முடிவில் 158/6 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பாபா அபரஜித் 72, ஜெகதீஷன் 25, அபிஷேக் தன்வர் 22 ரன்களும் எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் அஸ்வின் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் அரைசதமடித்து 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். விருது வாங்கியபின் அஸ்வின் பேசியதாவது:

திண்டுக்கல் மைதானத்தில் ரசிகர்கள் நல்ல ஆதரவு அளித்தார்கள். அடுத்து சேப்பாக்கில் நடைபெறும் போட்டிக்கு டிக்கெட் கிடைப்பதில் சிரமம் என்று கேள்விபட்டேன். பொதுவாக சிஎஸ்கே போட்டிக்கு மட்டுமே இப்படி நடக்கும். நாங்களும் சிஎஸ்கே மாதிரி ஜெர்ஸி அணிந்து சேப்பாக்கம் வருகிறோம். எங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

நாங்கள் மட்டமான பௌலிங், ஃபீல்டிங் செய்தோம். ஆனாலும் போட்டியில் இறுதி வரைக்கும் வந்தோம். சர்வதேச, ஐபிஎல் விளையாடும் வீரராக நான் பேட்டிங்கில் நன்றாக விளையாட வேண்டுமென்ற பொறுப்பு இருந்தது. முழுவதும் சரியான ஆட்டத்தை விளையாடவில்லை. அடுத்த போட்டியில் அதை சரிசெய்வோமென நம்புகிறேன் என்றார்.

குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் ஐ ட்ரீம் திருப்பூா் அணியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் ஆக.2ஆம் தேதி சென்னை சேப்பாக் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் கோவை லைகா கிங்ஸ் அணியுடன் மோதுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.