கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

டி20 உலகக் கோப்பை வெற்றியிலிருந்து நகர்ந்து செல்ல வேண்டும்: ரோஹித் சர்மா

டி20 உலகக் கோப்பை வெற்றியிலிருந்து நகர்ந்து அடுத்து என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா (கோப்புப்படம்)

Published On :

டி20 உலகக் கோப்பை வெற்றியிலிருந்து நகர்ந்து அடுத்து என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று அசத்தியது. டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு ஓய்விலிருந்த கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை வெற்றியிலிருந்து நகர்ந்து அடுத்து என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வில் இருந்தது நன்றாக இருந்தது. உலகக் கோப்பையை வென்ற பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட வருவது, நல்ல உணர்வைத் தருகிறது. தில்லி மற்றும் மும்பையில் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அதிலிருந்து நாங்கள் நகர்ந்து செல்ல வேண்டும். தொடர்ந்து முன்னேறி செல்ல வேண்டும்.

கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் நடந்ததும் அதுவே. அந்த தோல்வி மிகுந்த ஏமாற்றமளித்தது. இருப்பினும், அதிலிருந்து நகர்ந்து டி20 உலகக் கோப்பைக்குத் தயாரானோம். தற்போது டி20 உலகக் கோப்பை நிறைவடைந்துவிட்டது. அடுத்த விஷயத்தை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும். மிகப் பெரிய தொடர் வரவிருக்கிறது என்றார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஆகஸ்ட் 2) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.