தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதை வென்ற இலங்கை கேப்டன்!

ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருதை இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பட்டு வென்றுள்ளார்.

News image
- படம் | ஐசிசி
Updated On :12 ஆகஸ்ட் 2024, 2:21 pm

DIN

ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருதை இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பட்டு வென்றுள்ளார்.

ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா மற்றும் இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பட்டு ஆகியோர் இடம்பெற்றனர்.

இவர்கள் மூவரில் இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பட்டு ஜூலை மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருதினை வென்றுள்ளார்.

சிறந்த வீராங்கனைக்கான விருதினை வென்ற சமாரி அத்தப்பட்டு பேசியதாவது: ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதினை 3-வது முறையாக வெல்வதை கௌரவமாக கருதுகிறேன். இந்த சாதனை எனது கடின உழைப்பாலும், சக வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் கொடுத்த ஆதரவினாலும் கிடைத்துள்ளது. இலங்கையிலும், உலகெங்கிலும் கிரிக்கெட் விளையாடும் வீராங்கனைகளுக்கு இதுபோன்ற அங்கீகாரம் கண்டிப்பாக நேர்மறையான தாக்கத்தை கொடுக்கும் என நம்புகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.