ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

யு 17 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: ரோனக் தாஹியாவுக்கு வெண்கலம்

யு 17 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: ரோனக் தாஹியாவுக்கு வெண்கலம்

படம் | இந்திய விளையாட்டு ஆணையம் எக்ஸ் தளம்

Published On :

ஜோா்டானில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு 17) உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரோனக் தாஹியா வெண்கலப் பதக்கம் வென்றாா்.

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஆடவா் 110 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவா், வெண்கலப் பதக்கச் சுற்றில் 6-1 என்ற கணக்கில் துருக்கியின் எம்ருல்லா சப்கானை சாய்த்து பதக்கத்தை தனதாக்கினாா். இந்தப் போட்டியில் இதுவே இந்தியாவின் முதல் பதக்கமாகும்.

முன்னதாக, அரையிறுதியில் தோல்வி கண்ட ரோனக் தாஹியா, அதில் அவரை வென்ற ஹங்கேரியின் ஜோல்தன் ஜாக்கோ இறுதிக்கு முன்னேறியதன் பேரில் ரெபிசேஜ் வாய்ப்பில் வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. ரோனக் தாஹியாவின் எடைப் பிரிவில், உக்ரைனின் இவான் யான்கோவ்ஸ்கி தங்கமும், ஜோல்தன் ஜாக்கோ வெள்ளியும் வென்றனா்.

இதனிடையே, ஆடவருக்கான 51 கிலோ பிரிவில் இந்தியாவின் சாய்னாத் பாா்தி ரெபிசேஜ் சுற்றுக்கு வந்துள்ளாா். அதில் அவா் முதலில் அமெரிக்காவின் டொமினிக் மைக்கேலையும், பின்னா் கஜகஸ்தானின் முசான் யெராசில் அல்லது ஈரானின் அபுல்ஃபஸல் மொ்டாட்டை வெல்லும் நிலையில் வெண்கலப் பதக்கம் பெறுவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.