பாரீஸ் பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற அவனி லெகரா மற்றும் மோனா அகர்வால் அவர்களது வெற்றி குறித்து மனம் திறந்துள்ளனர்.
பாரீஸ் பாராலிம்பிக்கில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த நிலையில், துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற அவனி லெகரா மற்றும் மோனா அகர்வால் அவர்களது வெற்றி குறித்து மனம் திறந்துள்ளனர்.
அவனி லெகரா
இறுதிப்போட்டி மிகவும் சவாலானதாக இருந்தது. முதல் மூன்று பேருக்குமிடையே மிகக் குறைந்த அளவே வித்தியாசம் இருந்தது. முடிவினைப் பற்றி கவலைப்படாமல் எனது சிந்தனையில் கவனம் செலுத்தினேன். இந்த முறையும் இந்தியாவின் தேசிய கீதம் முதலாவதாக ஒலிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கின்றன. போட்டிகளில் கவனம் செலுத்தி இந்தியாவுக்காக மேலும் பதக்கங்களை வெல்ல விரும்புகிறேன்.
மோனா அகர்வால்
போட்டி மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், வெற்றி பெற்றுவிட்டேன். அவனி லெகரா உடனிருந்தது மிகுந்த உதவியாக இருந்தது. அவர் ஒரு சாம்பியன். அவர் எனக்கு ஊக்கமளிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி - விஜய்க்கு காஜல் அகர்வால் வாழ்த்து!

தேசிய கடற்கரை கைப்பந்து போட்டி: பதக்கம் வென்ற மாணவ- மாணவியருக்கு வரவேற்பு

நான்கு முறை வென்ற கே.ஆா். பெரியகருப்பன்!

காணாமல் போன தொகுதிகள்!
விடியோக்கள்

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரம்! முகத்தை மூடி வந்தது யார்?” பேரவையில் பிரேமலதாவின் கேள்விகள்! | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

