பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

நாங்கள் குடிசைப் பகுதியிலிருந்து வந்தவர்கள்: சர்ஃபராஸ் கானின் தந்தை உருக்கம்!

இந்திய டெஸ்ட் அணியில் முதன்முறையாக அறிமுகமாகியிருக்கும் சர்ஃபராஸ் கான் தற்போது மிகவும் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.

சர்ஃபராஸ் கான் அவரது தந்தையை கட்டியணைக்கும் காட்சி.

Published On :

இந்திய டெஸ்ட் அணியில் முதன்முறையாக அறிமுகமாகியிருக்கும் சர்பராஸ் கான் தற்போது மிகவும் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணியில் முதன்முறையாக அறிமுகமாகியிருக்கும் சர்பராஸ் கான் தற்போது மிகவும் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.

முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடிய சர்ஃபராஸ் 62 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.

சர்ஃபராஸ் கானை கண்ணீருடன் கட்டியணைத்து இந்திய அணிக்கு அனுப்பிய அவரது தந்தையும் (நௌஷாத் கான்) சமூக வலைதளங்களில் வைரலானார். அவர் அணிந்திருந்த டி ஷர்ட் வாசகம் மிகவும் புகழ்பெற்றது. கிரிக்கெட் ஜென்டில்மேன்களுக்கான போட்டி மட்டுமேயல்ல; அது அனைவருக்குமானது என்ற வசனம் இணையத்தில் வைரலானது.

ஆனந்த கண்ணீரில் சர்ஃபராஸ் கான் குடும்பத்தினர்.

ஆனந்த கண்ணீரில் சர்ஃபராஸ் கான் குடும்பத்தினர். - பிசிசிஐ

நௌஷாத் கான் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:

நாங்கள் குடிசைப் பகுதியில் இருந்து வந்திருக்கிறோம். அங்கு கழிவறைக்கு செல்வதற்காக வரிசையில் நின்றிருக்கும்போது எனது மகன்கள் அடி வாங்கியிருக்கிறார்கள். ஒன்றுமே இல்லாததில் இருந்து வந்திருக்கிறோம். இங்கிருந்து போனாலும் ஒன்றுமில்லை. சர்ஃபராஸ் ஒருநாள் என்னிடம் ’கவலைப் படாதீர்கள் அப்பா. இந்தியாவுக்கு தேர்வாகாவிட்டால் என்ன நாம் மீண்டும் ரயிலில் துணிகளை விற்க செல்வோம்’ எனக் கூறியதாகக் கூறினார்.

சர்ஃபராஸ் கானின் கனவும் அவரது தந்தை கனவும் நனவாகிவிட்டதாக பொது மக்கள் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.