ஜோ ரூட் இந்த ஷாட் விளையாடி ஆட்டமிழப்பார் என எதிர்பார்க்கவில்லை என இந்திய அணியின் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 319 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ரிவர்ஸ் ஷாட் விளையாடி ஆட்டமிழப்பார் என எதிர்பார்க்கவில்லை என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களது பார்ட்னர்ஷிப் இன்னும் சிறிது நேரம் நீடித்திருந்தால், இந்தியாவுக்கு அது கடினமானதாக மாறியிருக்கும். ஆனால், திடீரென ஜோ ரூட் தவறான ஷாட்டை விளையாடி ஆட்டமிழந்தார். அவரது ஆட்டமிழப்பு எங்களுக்கு சிறப்பானதாக அமைந்தது. ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடினார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

அறந்தாங்கியில் தவெக வேட்பாளா் வெற்றி

கோடை வெயிலின் தாக்கம்: கிணற்றில் குதித்து சிறுவா்கள் கொண்டாட்டம்

சஞ்சு சாம்சன் கடவுளுக்குப் பிடித்தமான குழந்தை..! சிராஜ் புகழாரம்!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை


