மிகப் பெரிய தோல்விக்குப் பிறகு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியது என்ன?

இங்கிலாந்துக்கு தோல்வியைப் பெற்றுத் தரும் இடத்தில் இருக்க நாங்கள் விரும்ப மாட்டோம்.
மிகப் பெரிய தோல்விக்குப் பிறகு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியது என்ன?
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.

இந்திய அணியுடன் ஏற்பட்ட மிகப் பெரிய தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த பென் ஸ்டோக்ஸ் பேசியதாவது: போட்டிக்கு முன்னதாக இந்த வாரம் கடினமானதாக இருக்கப் போகிறது எனக் கூறினேன். இங்கிலாந்துக்கு தோல்வியைப் பெற்றுத் தரும் இடத்தில் இருக்க நாங்கள் விரும்ப மாட்டோம்.

மிகப் பெரிய தோல்விக்குப் பிறகு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியது என்ன?
மிகப் பெரிய வெற்றிக்கு வித்திட்ட இளம் வீரர்கள்; ரோஹித் சர்மா புகழாரம்!

இங்கிலாந்து வீரர்களிடத்தில் ஏமாற்றமென்பது கண்டிப்பாக இருக்கும். இன்னும் நமக்கு இரண்டு போட்டிகள் உள்ளன. அணியின் கேப்டனாக அந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன் என்றார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி வருகிற பிப்ரவரி 23 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com