மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

ஜிம்பாப்வேவுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன? ஷுப்மன் கில் பதில்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

News image

ஷுப்மன் கில் - படம் | பிசிசிஐ

Updated On :6 ஜூலை 2024, 9:50 pm IST

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று முதல் தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஜிம்பாப்வே அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஷுப்மன் கில் பேசியதாவது: நாங்கள் நன்றாக பந்துவீசினோம். ஆனால், பேட்டிங்கில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அனைவரும் சிறிது அவசரமாக விளையாடியது போல தெரிகிறது. பேட்டிங்கில் நேரமெடுத்து சிறப்பாக விளையாடுவது குறித்து பேசினோம். ஆனால், அவ்வாறு நாங்கள் விளையாடவில்லை. ஆட்டத்தின் பாதிக்குள் நாங்கள் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். நான் ஆட்டமிழந்த விதம் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. 116 ரன்கள் என்ற இலக்கை துரத்தும்போது கடைசி வீரர் வரை வெற்றிக்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், இன்றையப் போட்டியில் ஏதோ தவறு நடந்துவிட்டது என்றார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி நாளை (ஜூலை 7) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.