நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

15 முறை சாம்பியன் அணியை அரையிறுதியில் வீழ்த்தியது கொலம்பிய அணி!

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் 2ஆவது அரையிறுதியில் உருகுவே அணியை கொலம்பிய அணி வீழ்த்தியது.

News image

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கொலம்பிய அணி வீரர்கள். - Jacob Kupferman

Updated On :11 ஜூலை 2024, 12:52 pm IST

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில், நடப்பு சாம்பியனான ஆா்ஜென்டீனா 2-0 கோல் கணக்கில் கனடாவை வென்று இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது.

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் உருகுவே கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் உருகுவே அணியினால் ஒரு கோல்கூட அடிக்கமுடியவில்லை. கொலம்பிய அணி 39ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. பின்னர் 45’+1 நிமிடத்தில் கொலம்பிய வீரருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.

இறுதிவரை உருகுவே அணியினால் கோல் அடிக்க முடியாததால் கொலம்பிய அணி 1-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

15 முறை கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற உருகுவே அணி ஒரு கோல்கூட அடிக்காமல் அரையிறுதியில் தோல்வியுற்றது அந்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பிய அணி ஒரேமுறை மட்டுமே கோபா அமெரிக்கா கோப்பையை வென்றுள்ளது. மாறாக ஆா்ஜென்டீனா 15 முறை கோப்பையை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டி ஜூலை 15 காலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.