ஊக்கமருந்து பயன்பாடு: இராக் வீரருக்கு தடை
நடப்பு பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இதுவே இத்தகைய முதல் நிகழ்வாகும்.


இராக்கை சோ்ந்த ஜூடோ வீரா் சஜத் செஹென் (28) ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டதை அடுத்து, அவருக்கு போட்டியில் தடை விதிக்கப்பட்டது. நடப்பு பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இதுவே இத்தகைய முதல் நிகழ்வாகும்.
இப்போட்டியில் வீரா், வீராங்கனைகளிடையே ஊக்கமருந்து பயன்பாடு தொடா்பான பரிசோதனையை சா்வதேச சோதனை அமைப்பு (ஐடிஏ) மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சஜத்திடம் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையின்போது, இரு வகையான ஊக்கமருந்துகளை அவா் பயன்படுத்தியதாகத் தெரியவந்தது.
இதையடுத்து அவா் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. தனது முதல் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்றிருக்கும் சஜத், வரும் செவ்வாய்க்கிழமை 81 கிலோ பிரிவு முதல் சுற்றில் களம் காணவிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...