பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

டிஎன்பிஎல்: அஸ்வின் அதிரடியால் எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் த்ரில் வெற்றி!

டிஎன்பிஎல் டி20 தொடரில் எலிமினேட்டர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது.

அஸ்வின் அதிரடியால் எலிமினேட்டரில் வென்றது திண்டுக்கல் அணி - படங்கள்: இன்ஸ்டா/ திண்டுக்கல் டிராகன்ஸ்

Published On :31 ஜூலை 2024, 11:18 pm IST

டிஎன்பிஎல் டி20 தொடரில் எலிமினேட்டர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிஃபயா் 1 ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐ ட்ரீம் திருப்பூா் தமிழன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

இதன் மூலம் அந்த அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது. தோல்வி கண்ட திருப்பூா், குவாலிஃபயா் 2 ஆட்டத்துக்கு வந்துள்ளது.

எலிமினேட்டா் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று மோதின.

முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 20 ஓவர் முடிவில் 158/6 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பாபா அபரஜித் 72, ஜெகதீஷன் 25, அபிஷேக் தன்வர் 22 ரன்களும் எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் அஸ்வின் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் அரைசதமடித்தார். தொடக்க வீரர் ஷிவம் சிங்கும் அரைசதமடித்தார். ஷிவம் சிங் 64 ரன்களுக்கும், 57 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் ஐ ட்ரீம் திருப்பூா் அணியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் ஆக.2ஆம் தேதி பலப்பரீட்சை நடத்துகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.