கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது நியூசிலாந்து!

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது.

News image

ANI

Updated On :14 ஜூன் 2024, 10:38 am IST

உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் உலகக் கோப்பை லீக் சுற்றுடன் நியூசிலாந்து அணி வெளியேறியது.

குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியை தொடர்ந்து, பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தானும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள உகாண்டா, பப்புவா நியூ கினியா மற்றும் நியூசிலாந்து அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது.

லீக் சுற்றில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி, இரண்டிலும் தோல்வியை தழுவியது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடிய 3 போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

மொத்தமுள்ள 4 குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.