நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது நியூசிலாந்து!

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது.

News image

ANI

Updated On :14 ஜூன் 2024, 10:38 am IST

உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் உலகக் கோப்பை லீக் சுற்றுடன் நியூசிலாந்து அணி வெளியேறியது.

குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியை தொடர்ந்து, பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தானும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள உகாண்டா, பப்புவா நியூ கினியா மற்றும் நியூசிலாந்து அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது.

லீக் சுற்றில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி, இரண்டிலும் தோல்வியை தழுவியது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடிய 3 போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

மொத்தமுள்ள 4 குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.