மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

ஆர்சிபி வீராங்கனைக்கு 'நொறுங்கிய கண்ணாடி'யைப் பரிசளித்த டாடா!

மகளிர் பிரீமியா் லீக் போட்டியில் ஆர்சிபி வீராங்கனை எல்லீஸ் பெர்ரிக்கு அவர் உடைத்த கார் கண்ணாடியை நினைவுப் பரிசாக பரிசளித்துள்ளது.

எல்லீஸ் பெர்ரிக்கு, அவர் உடைத்த கார் கண்ணாடியை நினைவுப் பரிசாக வழங்கிய டாடா நிறுவனம். - படம்: எக்ஸ் / ஆர்சிபி

Published On :

மகளிர் பிரீமியா் லீக் போட்டியில் ஆர்சிபி வீராங்கனை எல்லீஸ் பெர்ரிக்கு அவர் உடைத்த கார் கண்ணாடியை நினைவுப் பரிசாக பரிசளித்துள்ளது.

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் ‘வெளியேற்றும்’ ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 5 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இண்டியன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. இதையடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லி கேப்பிட்டல்ஸுடன் இறுதி ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது.

இதற்கு முன்பான லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அல்லீஸ் பெர்ரி அடித்த சிக்ஸர் மைதானத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை நொறுக்கியது.

இதற்காக அந்த உடைந்த காரின் கண்ணாடியை நினைவுப் பரிசாக டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

Story image

படம்: எக்ஸ் / ஆர்சிபி

மேலும் இறுதிப் போட்டிக்கு தேர்வாகிய ஆர்சி அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நேற்றையப் போட்டியில் பேட்டிங்கில் 66 ரன்கள் அடித்த எல்லீஸ் பெர்ரி பௌலிங்கிலும் ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகி விருதும் எல்லீஸ் பெர்ரிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story image

படம்: எக்ஸ் / ஆர்சிபி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.