விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்துள்ளது.

News image
- படம் | அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated On :14 மே 2024, 3:47 pm

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்துள்ளது.

அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (மே 14) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து முதலில் பேட் செய்தது.

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் லோர்கான் டக்கர் 41 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக ஆண்ட்ரூ பல்பிர்னி 35 ரன்களும், ஹாரி டெக்டார் 30 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷகின் ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அப்பாஸ் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும், முகமது அமீர் மற்றும் இமாத் வாசிம் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.