சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

யு19 உலக குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 6 பதக்கங்கள்

Published On :

அமெரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் கிருஷா வா்மா தங்கப் பதக்கம் வென்றாா். மேலும் 5 இந்தியா்கள் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.

மகளிருக்கான 75 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில், கிருஷா வா்மா 5-0 என்ற கணக்கில் ஜொ்மனியின் சைமன் லெரிகாவை வீழ்த்தி வாகை சூடினாா். இதர இறுதிச்சுற்றுகளில், 48 கிலோ பிரிவில் சாஞ்சல் சௌதரி இறுதிச்சுற்றில் தகுதிநீக்கமாகி வெள்ளி பெற்றாா். 57 கிலோ பிரிவு இறுதியில் அஞ்சலி குமாரி சிங் 0-5 என இங்கிலாந்தின் மியா டியா அய்டனிடமோ தோல்வியைத் தழுவி 2-ஆம் இடம் பிடித்தாா்.

60 கிலோ பிரிவில் வினி 2-3 என்ற புள்ளிகள் கணக்கில் இங்கிலாந்தின் எலா லான்ஸ்டேலிடம் தோற்றாா். 70 கிலோ பிரிவில் அகங்க்ஷா பலாஸ்வல் 1-4 என இங்கிலாந்தின் லில்லி டீகனிடமும், ஆடவா் 75 கிலோ பிரிவில் ராகுல் குண்டூ 1-4 என்ற கணக்கில் அமெரிக்காவின் அவினோங்யா ஜோசஃபிடமும் தோல்வியைத் தழுவினா்.

இவா்கள் தவிர, மேலும் 6 இந்தியா்கள் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றில் களம் காணவுள்ளதால், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.