சௌதி கிங் கோப்பையின் ரவுன்ட் ஆஃப்16 சுற்றின் முக்கியமான போட்டியில் அல்-நசீர் அணி 0-1 என்ற கோல் கணக்கில் அல்-தாவுன் அணியிடம் தோல்வியுற்றது.
5 முறை பேலன் தோர் (தங்கப் பந்து) விருது வாங்கிய ரொனால்டோ இரண்டாடுகள் ஆகியும் எந்தவொரு பெரிய கோப்பையையும் பெற்றுத் தரவில்லை.
கடந்த 2022இல் அல்-நசீர் அணிக்காக ரொனால்டோ இந்திய மதிப்பில் ரூ.18 ஆயிரம் கோடிக்கு 2025 வரை ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
71ஆவது நிமிடத்தில் அல்-தாவுன் அணியின் வலீத் அல்- அஹ்மது கோல் அடித்து அசத்தினார். அல் நசீர் அணிக்கு 95ஆவது நிமிடத்தில் பெனால்டி கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ரொனால்டோ அடித்த பந்து கோல் போஸ்டினை தாண்டி பார்வையாளர்களிடம் சென்றது. அங்கு ஒரு சிறுவன் வைத்திருந்த செல்ஃ போன் மீது விழுந்தது. எளிமையான வாய்ப்பினை ரொனால்டோ தவறவிட்டார்.
இதற்கு முன்னதாக 18 முறை பெனால்டி கோலை ரொனால்டோ சரியாக கோலாக மாற்றியிருந்த நிலையில் இந்தமுறை அல்-நசீர் அணியின் சொந்த மண்ணில் 14,519 பேருக்கு முன்னிலையில் அதை நிகழ்த்த தவறிவிட்டார்.
இந்த சீசனில் அல் நசீர் அணிக்கு 2 வாய்ப்புகள் இருந்தாலும் ஏற்கனவே அல் -ஹிலால் 6 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது.
அல்-நசீர் அணியின் பயிற்சியாளர் ஸ்டெபனோ பியோலி, “கோப்பையில் இருந்து வெளியேறுவது வருத்தமளிக்கிறது. ஆனால், இன்னும் 2 கோப்பைகள் இருக்கின்றன. அதில் எங்களது சிறந்த பங்களிப்பினை தருவோம்” என்றார்.
தோல்விக்குப் பிறகு ரொனால்டோ தனது எக்ஸ் பக்கத்தில், “ஒவ்வொரு சவாலும் வளர்வதற்கான ஒரு வாய்ப்பு” எனக் கூறியுள்ளார்.
எளிமையான வாய்ப்பை தவறவிட்ட ரொனால்டோவை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சௌதி புரோ லீக்: முதல்முறையாக கோப்பை வென்ற ரொனால்டோ!

மாநில சீனியா் ஹாக்கி போட்டி: சென்னை அணி சாம்பியன்

சௌதி புரோ லீக்கில் 100ஆவது கோல் அடித்த ரொனால்டோ..! முதல் கோப்பை வெல்வாரா?

வெளியேறியது இந்திய மகளிர் அணி
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



