ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாராலிம்பிக்: பாட்மின்டனில் இந்தியாவுக்குத் தங்கம்!

ஆடவருக்கான பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நிதேஷ் குமார் தங்கம் வென்றார்.

News image
Updated On :2 செப்டம்பர் 2024, 11:43 am

DIN

பாராலிம்பிக் தொடரின் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நிதேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் இந்தியாவுக்கு பாராலிம்பிக் தொடரில் மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

பாரீஸில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான பாட்மி்ன்டன் இறுதிப் போட்டி இன்று (செப். 2) நடைபெற்றது. இதில், இந்திய வீரர் நிதேஷ் குமார் பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேலை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 21-14 18-21 23-21 என்ற புள்ளிக் கணக்கில் பெத்தேலை வீழ்த்தி நிதேஷ் தங்கப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் கடந்த முறை நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த பெத்தேலை நிதேஷ் குமார் தோற்கடித்துள்ளார்.

துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில், நடப்பு சாம்பியனான அவனி லெகாரா மீண்டும் தங்கம் வென்று சாதனை படைத்தார். அதனைத் தொடர்ந்து தற்போது நிதேஷ் குமாரும் தங்கம் வென்றுள்ளார்.

பாராலிம்பிக்கில் தற்போதுவரை இந்தியா, 2 தங்கம் உள்பட 9 பதக்கங்களை வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.