ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

ஓய்வு பெறுவதற்கு முன்பா வார்னருக்கு இப்படி நடக்க வேண்டும்!

தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள டேவிட் வார்னர் அவரது மதிப்பு மிக்க பச்சை நிறத் தொப்பியை யாரோ எடுத்துவிட்டதாகவும், அதனை தயவு செய்து திருப்பியளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். 

Published On :7 பிப்ரவரி 2024, 8:56 pm IST

தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள டேவிட் வார்னர் அவரது மதிப்பு மிக்க பச்சை நிறத் தொப்பியை யாரோ எடுத்துவிட்டதாகவும், அதனை தயவு செய்து திருப்பியளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். 

பாகிஸ்தானுடனான 3  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரே தனது கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் அறிவித்திருந்தார். அதன்படி, பாகிஸ்தானுக்கு எதிராக நாளை தொடங்கவுள்ள டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெறுகிறார். 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது.  மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று வார்னருக்கு பிரியாவிடை கொடுக்க ஆஸ்திரேலிய வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள டேவிட் வார்னர் அவரது மதிப்பு மிக்க பச்சை நிறத் தொப்பியை யாரோ எடுத்துவிட்டதாகவும், அதனை தயவு செய்து திருப்பியளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். 

இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பதில் தெரிவித்திருப்பதாவது: நாளை நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியே எனது கடைசி டெஸ்ட் போட்டி. நான் எனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் கடைசிக் கட்டத்தில் இருக்கிறேன். யாரோ எனது பையிலிருந்து எனது மதிப்புமிக்க பச்சைநிற தொப்பியை எடுத்துவிட்டார்கள். எனது பொருள்கள் அடங்கிய பை மெல்போர்னுக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து சில நாள்களுக்கு முன்பு சிட்னிக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனது பையை அனுப்பிய நிறுவனத்திடம் நான் விசாரித்துவிட்டேன்.

கேமராவை பரிசோதித்த அவர்கள் யாரும் நாங்கள் அனுப்பிய பார்சலைத் திறக்கவில்லை என தெரிவித்து விட்டனர். யாரேனும் தவறுதலாக எனது பையை எடுத்திருந்தால், என்னிடம் கொடுத்துவிடுங்கள். அதில் எனது ராசியான பச்சை நிறத் தொப்பி இருந்தது. அதனை எனது கடைசிப் போட்டியில் அணிந்து விளையாடுவதற்காக வைத்திருந்தேன். எனது பை யாரிடம் இருந்தாலும் அதனை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் என்னிடம் கொடுத்துவிட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் அந்த பச்சை நிறத் தொப்பியை அணிந்து விளையாடுவதை மிகுந்த கௌவரவமாக கருதுவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.