கேப்டவுனில் வென்ற முதல் ஆசிய அணி: இந்தியா அபார வெற்றி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
கேப்டவுனில் வென்ற முதல் ஆசிய அணி: இந்தியா அபார வெற்றி!
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியாவும் 153 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 

இரண்டாம் ஒன்னிங்ஸில் மார்க்ரம் மட்டும் சதமடிக்க தென்னாபிரிக்கா 176 ரன்களுக்கு பும்ராவின் அசத்தலான பந்து வீச்சில் ஆல் அவுட்டானது. 

79 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 11.6 ஓவரில் 80/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

ஜெய்ஸ்வால் 28, ஷுபம்ன் கில் 10, விராட் கோலி 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். ரோஹித் சர்மா 17 ரன்களுடனும் ஸ்ரேயாஷ் ஐயர் 4 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிக்கு உதவினார்கள். 

இந்த வெற்றியின் மூலம் 1-1 என சமநிலையில் முடிந்தது. கேப்டவுன் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற முதல் ஆசிய நாடாக இந்திய அணி திகழ்கிறது. 

தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற இந்திய அணி டி20, டெஸ்டினை டிரா செய்தது. ஒருநாள் போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com