ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று: ருத்ராங்க்ஷ்/மெஹுலி இணைக்கு தங்கம்
இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல்/மெஹுலி கோஷ் இணை 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர்.

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல்/மெஹுலி கோஷ் இணை 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர்.
இறுதிச்சுற்றில் அந்த இணை 16-10 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் ஷென் யுஃபான்/ஜு மிங்ஷுவாய் கூட்டணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. முன்னதாக தகுதிச்சுற்றில் ருத்ராங்க்ஷ்/மெஹுலி இணை 631.3 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு இந்திய ஜோடியான இளவேனில் வாலறிவன்/அர்ஜுன் பபுதா, 632.3 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடித்தனர்.
ருத்ராங்க்ஷ், மெஹுலி கோஷ் ஏற்கெனவே பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதிபெற்றவர்களாவர்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் சீமா/ரிதம் சங்வான் இணை 11-17 என வியத்நாமின் து வின் டிரின்/காங் ஹய் பாம் இணையிடம் வெற்றியை இழந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.
இதனிடையே, ஜூனியர் ஏர் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் இஷா அனில் தக்சேல்/உமாமகேஷ் மத்தினேனி கூட்டணி 17-11 என்ற புள்ளிகளில் சீனாவின் சு ஜிகிங்/பன் போவன் இணையை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றியது. மற்றொரு இந்திய ஜோடியான அபினவ் ஷா/அன்வி ரத்தோட் 16-10 என இந்தோனேசியாவின் மசாயு புத்ரி/பஸ்கலிஸ் ஸ்டீவன் கூட்டணியை சாய்த்து வெண்கம் பெற்றனர்.
இத்துடன் இப்போட்டியில் இந்தியர்கள் என்ற பதக்கங்களின் எண்ணிக்கை, 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 10-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






